சுபாஷ் சந்திரபோஸ்

முன்னுரை இந்திய நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் . இவரது வீர வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் . பிறப்பும் , இளமையும் நேதாஜி , ஒரிசாவில் 23.1.1897- ல் தேதியன்று ஜானகி நாத் போஸ் , பிரபாவதி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் . இளம் வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கினார் . 1919- ல் பட்டப் படிப்பை முடித்தார் . அதன் பிறகு லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐ . சி . எஸ் . படிப்பை வெற்றிகரமாக முடித்தார் . 1920- ல் லண்டனில் இருந்து தேசபந்து சித்தரஞ்சன் தாசிற்கு ஒரு கடிதம் எழுதினார் . அதில் , படிப்பை முடித்தவுடன் தான் நாட்டு விடுதலைக்காக பாடுபடப்போவதாக குறிப்பிட்டு இருந்தார் . ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக , பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்காக சித்தரஞ்சன் தாஸ் , கல்கத்தாவில் தேசியக் கல்லூரி ஒன்றை நிறுவினார் . அந்த கல்லூரியின் தலைமை பேராசிரியராக சுபாஷை நியமித்தார் . வங்காள மாநில காங்கிரஸ் கமிட்டிய...