Posts

Showing posts from May, 2018

சுபாஷ் சந்திரபோஸ்

Image
முன்னுரை இந்திய நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் . இவரது வீர வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம் . பிறப்பும் , இளமையும் நேதாஜி , ஒரிசாவில் 23.1.1897- ல் தேதியன்று ஜானகி நாத் போஸ் , பிரபாவதி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் . இளம் வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கினார் . 1919- ல் பட்டப் படிப்பை முடித்தார் . அதன் பிறகு லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐ . சி . எஸ் . படிப்பை வெற்றிகரமாக முடித்தார் . 1920- ல் லண்டனில் இருந்து தேசபந்து சித்தரஞ்சன் தாசிற்கு ஒரு கடிதம் எழுதினார் . அதில் , படிப்பை முடித்தவுடன் தான் நாட்டு விடுதலைக்காக பாடுபடப்போவதாக குறிப்பிட்டு இருந்தார் . ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக , பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்காக சித்தரஞ்சன் தாஸ் , கல்கத்தாவில் தேசியக் கல்லூரி ஒன்றை நிறுவினார் . அந்த கல்லூரியின் தலைமை பேராசிரியராக சுபாஷை நியமித்தார் . வங்காள மாநில காங்கிரஸ் கமிட்டிய...

மருது சகோதரர்கள்

Image
முன்னுரை மருது பாண்டியர்கள் , மருது சகோதரர்கள் , ' மருத்துவர் ' என்றும் அழைக்கப்பட்டனர் . இவர்களில் அண்ணனின் பெயர் பெரிய மருது . தம்பியின் பெயர் சின்ன மருது . ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த தியாகிகளில் மருது சகோதரர்களும் முக்கியமானவர்கள் . இவர்களின் வரலாற்றைச் சுருக்கமாக இங்கு காண்போம் . பிறப்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முக்குளம் என்ற ஊரில் மொக்கப் பழனியப்பன் சேர்வை அனந்தாயி அம்மையார் தம்பதியினருக்கு மகன்களாகப் பிறந்தனர் இவர்களது காலம் 1748 முதல் 1801 வரை . படைத்தளபதி 1772- ம் ஆண்டில் ராமநாதபுரம் , சிவகங்கைச்சீமை போன்ற சிற்றரசுகள் மீது ஆங்கிலேய படையெடுப்பு நடந்தது . அப்போது முத்துவடுகர் என்பவர் சிவகங்கை மன்னராக இருந்தார் . இவரது மனைவி வேலு நாச்சியாரும் . வீரமிக்கவராகவே இருந்தார் . இவர்களிடம் படைத் தளபதிகளாக மருது சகோதரர்கள் இருந்தனர் . முத்துவடுகர் வீரமுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டாலும் , போரில் உயிர் துறந்தார் . வேலு நாச்சியாரும், மருது சகோதரர...