மருது சகோதரர்கள்
முன்னுரை
மருது பாண்டியர்கள், மருது சகோதரர்கள்,
'மருத்துவர்' என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களில் அண்ணனின் பெயர் பெரிய மருது. தம்பியின் பெயர் சின்ன மருது. ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த தியாகிகளில் மருது சகோதரர்களும் முக்கியமானவர்கள். இவர்களின் வரலாற்றைச் சுருக்கமாக இங்கு காண்போம்.
பிறப்பு
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முக்குளம் என்ற ஊரில் மொக்கப் பழனியப்பன் சேர்வை அனந்தாயி அம்மையார் தம்பதியினருக்கு மகன்களாகப் பிறந்தனர் இவர்களது காலம் 1748 முதல் 1801 வரை.
படைத்தளபதி
1772-ம் ஆண்டில் ராமநாதபுரம், சிவகங்கைச்சீமை போன்ற சிற்றரசுகள் மீது ஆங்கிலேய படையெடுப்பு நடந்தது. அப்போது முத்துவடுகர் என்பவர் சிவகங்கை மன்னராக இருந்தார். இவரது மனைவி வேலு நாச்சியாரும். வீரமிக்கவராகவே இருந்தார். இவர்களிடம் படைத் தளபதிகளாக மருது சகோதரர்கள் இருந்தனர். முத்துவடுகர் வீரமுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டாலும், போரில் உயிர் துறந்தார். வேலு நாச்சியாரும், மருது சகோதரர்களும் தப்பிச் சென்று. திண்டுக்கல்
மலையில் தஞ்சம் புகுந்தனர். அங்கு ஹைதர் அலியின் துணையை நாடினர். சிவகங்கை அரசு மருது
பாண்டியர் கைக்கு மாறியது. பெரிய மருது ஒரு வேட்டைப் பிரியர். அவர் காட்டில் வேட்டையாடுவதில்
விருப்பம் கொள்ள. சின்ன மருது சிவகங்கை ஆட்சியை சிறப்பாக செய்தார். 1783-ம் ஆண்டில்
ஆங்கிலேயப் படைகள் சிவகங்கை மீது படையெடுத்தது. இதனை மருது சகோதரர்கள் முறியடித்து
வென்றனர். இதேபோல், மறுமுறை 1789-ல் கர்னல் ஸ்டுவர்ட் படையெடுத்த போதும் தீரமுடன்
போரிட்டு வெற்றியே கண்டனர்.
ஆங்கிலேயருடன் கடும்போர்
இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிறகு, அவரது தம்பி ஊமைத்துரைக்கு இவர்கள் அடைக்கலம் தந்தனர். இதைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள், மருது சகோதரர்களை தண்டிக்க 1801-ம் ஆண்டில் கடும் போரை நடத்தினர். இது ஏறத்தாழ 150 நாட்கள் இடைவிடாது நடந்தது. ஆங்கிலேயர்களே இறுதியில் வெற்றி பெற்றனர். கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக் கொடுத்தது போல நயவஞ்சகர்களால் இவர்களும் காட்டிக் கொடுக்கப்பட்டனர். 1801-ம் ஆண்டில் அக்டோபர் 27-ம் நாள் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
வீரத்தால் அழிக்க முடியாத இவர்கள். மருதுபாண்டியர் காவலர்களில் ஒருவராண கறுத்தான் என்பவனின் பணத்தாசையால் சதி வலையில் சிக்கி வீழ்ந்தனர். ஆங்கிலேயர்களால், பெரிய மருதுவை சிறை வைக்க முடியவில்லை. தெய்வ பக்தி நிறைந்த மருது சகோதரர்கள் காளையார் கோவிலைக் கட்டினர். பத்து நாட்களுக்குள் பெரிய மருது சரண் அடையாவிட்டால். காளையார் கோவில் இடிக்கப்படும் என்று ஆங்கிலேயர் அறிவித்தனர்.
கடவுள் பக்தியால் சரண்
கடவுள் பக்தியின் காரணமாக கோவிலை காக்க பெரிய மருது தானாகவே முன்வந்து சரண் அடைந்தார். அவரது பக்தி மரணத்திலும் தெரிந்தது. இறந்த பின்பு உடலை திருப்பத்தூரிலும், தலை காளையார் கோவில் முன்பும் புதைக்க வேண்டும் என இவர் தந்த வேண்டுகோளே இதற்கு சாட்சி. அதன்படியே அவரது உடல் புதைக்கப்பட்டது. இவர்கள் காளையார் கோவில் கட்டியது மட்டும் அல்லாமல், மதுரை மீனாட்சி கோவில், குன்றக்குடி முருகன் கோவில் போன்றவற்றிக்கு திருப்பணி கொடுத்து உதவினர். பல இடங்களில் அன்னசத்திரங்கள் அமைத்து. தரும் காரியங்களில் ஈடுபட்டனர்.
நீர்ப்பாசனத்திற்காக கிணறு, குளங்களை வெட்டி மக்கள் நலனைக் காத்தனர். இவர்களது சுதந்திர தாகம். ஆங்கிலேயர் எதிர்ப்பு போன்ற வீர உணர்வால் இவர்கள் பெயர் வரலாற்றில் இடம் பெற்றது.
Comments
Post a Comment