காடுகள் பாதுகாப்பு
முன்னுரை
'காடுகள் நாட்டின் அரண்'
என்பர் சான்றோர். அக்காடுகளைப் பாதுகாக்க மாநில அரசும். மத்திய
அரசும் அரும்பாடுபட்டு வருகின்றன. காடுகளினால் கிடைக்கும் நற்பலன்கள் ஒன்றல்ல இரண்டல்ல. காடுகளினால்
நமக்கு உண்டாகும் பலன்களை நாம் அறிந்து
கொள்ள வேண்டும்.
பசுமைப் பொன்
காடுகளைப் பசுமைப்பொன் என்று அழைத்தால் அதில்
தவறில்லை. காடுகளின் பயனை அறிந்தே நம்
மத்திய அரசு 'வனத்துறை பாதுகாப்பு'
என்ற ஒரு அமைச்சகத்தையே நியமித்துள்ளது.
விறகுகளுக்காகவும் ஏனைய மரச்சாமான்ககளை உருவாக்கவும்
நாம் வெட்டி அழித்த காடுகள்
ஒன்றல்ல இரண்டல்ல. காடுகள் அழிந்து போகுமாயின்
அது நாட்டைப் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் யாவருக்கும் உண்டு.
பயன்கள்
காடுகளே மழைக்கு முக்கிய
காரணமாக விளக்குகிறது என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும். அடந்த மரங்கள் கொண்ட
காடுகளே கார்மேகங்களை குளிர்வித்து மழையைப் பொழிவிக்கின்றன.
மழையில்லையேல் நாட்டில் வளமேது? காலத்தே மழைபெய்யாவிடில்
நாட்டில் வறட்சி, பஞ்சம், பற்றாக்குறை,
குடிநீர் தட்டுப்பாடு, தானியங்கள் விளையாமை என பல தீமைகள்
விளையும்.
காடுகளிலுள்ள மரங்களின் வேர்கள் மண்ணில் ஊடுருவி
இருப்பதாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாதிருக்கிறது.
மரங்கள் இல்லையென்றால் மண் இளகி ஆங்காங்கே
நிலச்சரிவு புதைமணல் என்ற நிலையாகிவிடும்.
இது தவிர காடுகள்
மூலிகைகளின் பொக்கிஷங்கள் ஆகும். சித்த மருத்துவத்தில்
பயன்படும் அனைத்து மூலிகைகளையும் தருவது
காடுகளே என்பதை நாம் மறந்து
விடக்கூடாது.
தேன், ஏலம், மிளகு,
காய், கனிகள் போன்ற உணவுப்
பயிர்களைத் தருவது காடுகளே. மரச்சாமான்கள்
செய்யப்பயன்படும் தேக்கு, கருங்காலி, போன்ற
மரங்களை விளைவிப்பதும் காடுகள்.
பறவைகளின் சரணாலயங்களாகவும் விலங்குகளின் சரணாலயங்களாகவும் விளங்குவது காடுகளே.
யாரும் பராமரிக்காமல் இயற்கையின்
வரப்பிரசாதமாக விளங்கும் காடுகள் மனிதர்க்கு இத்தனைப்
பயன்களை அள்ளி வழங்குவதை நாம்
எண்ணிப் பார்க்க வேண்டும்.
முடிவுரை :
காடுகளின் பயனைத் தெரிந்த நாம்
அதனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தேவையின்றி
மரங்களை வெட்டுதல் கூடாது.
ஒரு மரத்தை வெட்டினால்
இரு மரங்களை நடு என்று
இன்று எல்லாவிடங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதை நாமும் செயல்படுத்த
வேண்டும். மேலும் புதியதாக வளர்ந்து
நமது வருங்கால சந்ததியினரை நலமுடன் வாழவைப்போம்.
நல்ல காற்றையும், மழையையும்
உணவையும் தந்து மனிதர்களை வாழவைக்கும்
காடுகளைப் பாதுகாத்து பதில் நன்றியைச் செலுத்துவோம்.
Wow
ReplyDeletesupper
Deletenice
Super 👌👌👌👌👌👍👍👍👍
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper
ReplyDeletesuper paa
ReplyDeleteFantastic superb 👌👌👌👏👌👌👍👌👌👌👌👌👌👍👍👍👏👍👏👍👍
ReplyDeleteexellent
ReplyDeleteVery good
ReplyDeletevery good it is use full for me first i thought it is waste after reading this it is good
ReplyDelete👍🏻
Deletesupper
ReplyDeleteBest of the best but too long
ReplyDeleteok tcr
ReplyDeleteSuper thanks
ReplyDeletesuper and thanks
ReplyDeleteancol enakku romba usfull
3
👍👍👍👍👍👍👍
ReplyDeleteTHANK VERY WELL
Super 👌
ReplyDelete