சுபாஷ் சந்திரபோஸ்




முன்னுரை

இந்திய நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவரது வீர வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.

பிறப்பும், இளமையும்

நேதாஜி, ஒரிசாவில் 23.1.1897-ல் தேதியன்று ஜானகி நாத் போஸ், பிரபாவதி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இளம் வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கினார். 1919-ல் பட்டப் படிப்பை முடித்தார். அதன் பிறகு லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து .சி.எஸ். படிப்பை வெற்றிகரமாக முடித்தார். 1920-ல் லண்டனில் இருந்து தேசபந்து சித்தரஞ்சன் தாசிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், படிப்பை முடித்தவுடன் தான் நாட்டு விடுதலைக்காக பாடுபடப்போவதாக குறிப்பிட்டு இருந்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்காக சித்தரஞ்சன் தாஸ், கல்கத்தாவில் தேசியக் கல்லூரி ஒன்றை நிறுவினார். அந்த கல்லூரியின் தலைமை பேராசிரியராக சுபாஷை நியமித்தார். வங்காள மாநில காங்கிரஸ் கமிட்டியின் பிரச்சார குழுவின் தலைமைப் பொறுப்பையும், ஒத்துழையாமை இயக்க தொண்டர் படையின் தலைமைப் பொறுப்பையும் சுபாஷிடம் ஒப்படைத்தார். சித்தரஞ்சன்தாஸ் கல்கத்தா மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்றதும், அதன் நிர்வாக அதிகாரியாக சுபாஷை நியமித்தார். சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலும், சுபாஷின் நேர்மையான நிர்வாக திறனாலும் கல்கத்தா மாநகராட்சி புதுப் பொலிவு பெற்றது. இதன் பலனாக, சுபாஷ் கல்கத்தா நகர மக்களின் மனதில் இடம் பிடித்தார். எனவே சுபாஷின் வளர்ச்சி ஆங்கில அரசுக்கு பிடிக்கவில்லை.

சிறை வாழ்க்கை

1921-ல் இந்தியாவிற்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஆங்கில அரசு சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பின்னர் அவர் மீது அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி, பெர்காம்பூர் சிறையிலும், பர்மாவில் உள்ள மாண்டேலா சிறையிலும் அடைத்தது. சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தார் நேதாஜி. இதனால் அவரது உடல் பாதிக்கப்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், இந்திய மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவர்கள் என்று பயந்த ஆங்கில அரசு, அவரை விடுதலை செய்தது.

அதன் பிறகு நேருவின் தலைமையில் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சுபாஷிற்கு தடை விதித்தது ஆங்கில அரசு. அதையும் மீறி சுபாஷ் மாநாட்டில் கலந்து கொள்ள முயன்றதால் அவரை 1936-ல் கைது செய்தது. மறுபடியும் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் 1940 முதல் அவரை வீட்டுக்காவலில் வைத்தது ஆங்கில அரசு. அங்கு போலீசாரின் கண்காணிப்பில் இருந்த தீவிரம் மெல்ல குறைந்தது. அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நேதாஜி வீட்டை விட்டு வெளியேறினார்.



ஜெர்மானிய படைவீரர்களால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை விடுதலை செய்யுமாறு, ஜெர்மானிய அரசிடம் கோரிக்கை வைத்தார் நேதாஜி. ஜெர்மானிய அரசும் அவரது கோரிக்கையை நிறைவேற்றியது. அதன் பிறகு 1944-ல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். ஆங்கிலேயர்களுடன் போரைத் தொடர்ந்தார். இந்திய ராணுவப் படையை சமாளிக்க முடியாமல்ஆங்கில அரசு பின் வாங்கியது.

'வங்கம் தந்த சிங்கம்' என்ற அழைக்கப்பட்ட நேதாஜி, 1945-ல் ஜப்பானுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விமானம் பார்மோஸா என்ற தீவின் அருகில் பறந்த போது வெடித்துச் சிதறியது.


Comments

Popular posts from this blog

காடுகள் பாதுகாப்பு

மாவீரன் பூலித்தேவன்

சுனாமி