Posts

Showing posts from June, 2018

இந்திரா காந்தி

Image
முன்னுரை இந்திய நாட்டு விடுதலைக்குப் போராடிய குடும்பங்களுள் புகழ் வாய்ந்தது நேருவின் குடும்பம் . ஜவஹர்லால் நேரு ' மனிதருள் மாணிக்கம் ' ' ஆசிய ஜோதி ' எனப் பாராட்டப் பெற்றவர் . அவரது மகள் இந்திரா பிரியதர்ஷினி சமநிலைச் சமுதாயம் காண விரும்பிய வீராங்கனை . இவரே பிற்காலத்தில் ' இந்திரா காந்தி ' என்று அழைக்கப்பட்டார் . சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு . இவர் சுமார் 17 ஆண்டுகள் பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கும் , வளமைக்கும் வித்திட்டார் . இவருக்கும் பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார் . அவருடைய மறைவிற்குப் பின் குல்சாரிலால் நந்தா சில நாட்கள் தற்காலிகமாக பதவி வகித்தார் . 19.01.1966- ல் இந்திராகாந்தி பிரதமர் ஆனார் . அன்று முதல் 24.03.1977- வரை பதவியிலிருந்தார் . பின்னர் 1977- ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த இவர் . 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றார் . 14.01.1980 முதல் தொடர்ந்து தனது ஆயுட் காலம் முடியும் வரை பதவியில் இருந்தார் . கட்சியின் ...

காடுகள் பாதுகாப்பு

Image
முன்னுரை ' காடுகள் நாட்டின் அரண் ' என்பர் சான்றோர் . அக்காடுகளைப் பாதுகாக்க மாநில அரசும் . மத்திய அரசும் அரும்பாடுபட்டு வருகின்றன . காடுகளினால் கிடைக்கும் நற்பலன்கள் ஒன்றல்ல இரண்டல்ல . காடுகளினால் நமக்கு உண்டாகும் பலன்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் . பசுமைப் பொன் காடுகளைப் பசுமைப்பொன் என்று அழைத்தால் அதில் தவறில்லை . காடுகளின் பயனை அறிந்தே நம் மத்திய அரசு ' வனத்துறை பாதுகாப்பு ' என்ற ஒரு அமைச்சகத்தையே நியமித்துள்ளது . விறகுகளுக்காகவும் ஏனைய மரச்சாமான்ககளை உருவாக்கவும் நாம் வெட்டி அழித்த காடுகள் ஒன்றல்ல இரண்டல்ல . காடுகள் அழிந்து போகுமாயின் அது நாட்டைப் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . அரசாங்கத்திற்கு மட்டுமல்ல , காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் யாவருக்கும் உண்டு . பயன்கள் காடுகளே மழைக்கு முக்கிய காரணமாக விளக்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . அடந்த மரங்கள் கொண்ட காடுகளே கார்மேகங்களை குளிர்வித்து மழையைப் பொழிவிக்கின்றன...

முதறிஞர் ராஜாஜி

Image
முன்னுரை தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர் . கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர் , இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் , இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்து அனைவராலும் தென்னாட்டு காந்தி , அரசியல் ஞானி , மூதறிஞர் என்று போற்றப்படுபவர் ராஜாஜி . பிறப்பும் , இளமையும் இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் , 10.12.1878- ம் சக்கரவர்த்தி அய்யங்கார் , சுந்தரம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் . இவரது இயற்பெயர் ராஜகோபாலச்சாரியார் . இளம் வயதிலேயே கல்வியில் நாட்டம் மிக்கவர் . இவர் இந்துக் கல்லூரியில் பி . ஏ . பட்டம் பெற்றார் . இவர் தம் 16- வது வயதில் அலமேலு மங்கையை திருமணம் செய்து கொண்டார் . சமுதாயப் புரட்சி ராஜாஜி , இந்து சமயத்தின் மீது பற்றுள்ளவர் . தீண்டாமை மற்றும் மூடப்பழக்கத்தை எதிர்த்தவர் . இந்த விஷயத்தில் காந்தியடிகளை தனது குருவாக ஏற்றுக் கொண்டார் . சேலம் மாநகராட்சிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . மாநகராட்சி , பல துறைகளிலும் வளர்ச்சியடைந்தது . பல்வேறு எதிர்ப்புக...

சுனாமி

Image
முன்னுரை இதுவரை இந்திய மக்கள் கேட்டிராத பெயர் சுனாமி 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்களிலும் திருப்பத் திரும்பக் கூறப்பட்டது . சுனாமி என்ற வார்த்தையை மட்டுமல்ல அதுகுறித்த நடவடிக்கைப் பற்றிய விழிப்புணர்வையும் உலகம் பெற்றது . சுனாமி சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை . பேரழிவை உண்டாக்கும் ராட்சத அலைகளை ஜப்பான் மொழியில் சுனாமி என்று அழைப்பர் . அந்த ஜப்பானிய வாரத்தையை உலகம் முழுதும் அன்று தெரிந்து கொண்டது . நிகழ்ந்த பேரழிவு 2004- ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26- ம் தேதியில் சுனாமி என்ற இயற்கைச் சீற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர் . கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்களும் சேதமடைந்தன . கிழக்கிந்திய தீவான சுமத்ராவில் மிகக்கோரமான பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி அலைகள் தமிழகத்தின் நாகப்பட்டினம் , காரைக்கால் , கன்னயாகுமரி , குளச்சல் , கேரளாவின் சில கடற்கரைப் பகுதிகளிலும் பெரும் நாசத்தை ஏற்படுத்தின . கடல் அலைகள் பெரும் சீற...