இந்திரா காந்தி

முன்னுரை இந்திய நாட்டு விடுதலைக்குப் போராடிய குடும்பங்களுள் புகழ் வாய்ந்தது நேருவின் குடும்பம் . ஜவஹர்லால் நேரு ' மனிதருள் மாணிக்கம் ' ' ஆசிய ஜோதி ' எனப் பாராட்டப் பெற்றவர் . அவரது மகள் இந்திரா பிரியதர்ஷினி சமநிலைச் சமுதாயம் காண விரும்பிய வீராங்கனை . இவரே பிற்காலத்தில் ' இந்திரா காந்தி ' என்று அழைக்கப்பட்டார் . சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு . இவர் சுமார் 17 ஆண்டுகள் பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கும் , வளமைக்கும் வித்திட்டார் . இவருக்கும் பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார் . அவருடைய மறைவிற்குப் பின் குல்சாரிலால் நந்தா சில நாட்கள் தற்காலிகமாக பதவி வகித்தார் . 19.01.1966- ல் இந்திராகாந்தி பிரதமர் ஆனார் . அன்று முதல் 24.03.1977- வரை பதவியிலிருந்தார் . பின்னர் 1977- ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த இவர் . 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றார் . 14.01.1980 முதல் தொடர்ந்து தனது ஆயுட் காலம் முடியும் வரை பதவியில் இருந்தார் . கட்சியின் ...