சுனாமி
முன்னுரை
இதுவரை இந்திய மக்கள்
கேட்டிராத பெயர் சுனாமி 2004 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா மட்டுமின்றி
உலகம் முழுவதும் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்களிலும் திருப்பத் திரும்பக் கூறப்பட்டது. சுனாமி என்ற வார்த்தையை மட்டுமல்ல
அதுகுறித்த நடவடிக்கைப் பற்றிய விழிப்புணர்வையும் உலகம்
பெற்றது.
சுனாமி
சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை.
பேரழிவை உண்டாக்கும் ராட்சத அலைகளை ஜப்பான்
மொழியில் சுனாமி என்று அழைப்பர்.
அந்த ஜப்பானிய வாரத்தையை உலகம் முழுதும் அன்று
தெரிந்து கொண்டது.
நிகழ்ந்த பேரழிவு
2004-ம் ஆண்டு டிசம்பர்
மாதம் 26-ம் தேதியில் சுனாமி
என்ற இயற்கைச் சீற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். கோடிக்கணக்கான
மதிப்புடைய பொருட்களும் சேதமடைந்தன.
கிழக்கிந்திய தீவான சுமத்ராவில் மிகக்கோரமான
பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி அலைகள் தமிழகத்தின்
நாகப்பட்டினம், காரைக்கால், கன்னயாகுமரி, குளச்சல், கேரளாவின் சில கடற்கரைப் பகுதிகளிலும்
பெரும் நாசத்தை ஏற்படுத்தின.
கடல் அலைகள் பெரும்
சீற்றம் கொண்டு தரைப்பகுதிக்கு வந்ததாலேயே
இந்தப் பேரழிவு ஏற்பட்டது. கோதரத்
தாண்டவம் ஆடும் இவ்வகை ராட்சத
அலைகளை 'சுனாமி' என்று அழைப்பார்கள்
என்று ஜப்பான் தெரிவித்தது.
சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பிறகே இத்தகைய சுனாமி
தாக்குதல் நடந்துள்ளதாகவும் அறியப்பட்டது.
சுனாமியின் காரணங்கள்
கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்படும்போது கடலுக்குள் இருக்கும் நிலத்தில் சில இடங்கள் மேடாகவும்
சில இடங்கள் தாழ்ந்தும் போகும்.
இந்த திடீர் மாற்றத்தால் கடல்
நீர் மட்டம் சில இடங்களில்
உயர்ந்தும் சில இடங்களில் தாழ்ந்தும்
போகும்.
கடல் நீர் மட்டம்
உயரும்போது அந்தப்பகுதிகளில் ராட்சத அலைகள் வீசும்.
அவ்வாறு வீசிய ராட்சத அலைகளை
கடலை ஒட்டிய நிலப்பரப்பிற்குள் புகுந்து
பேரிழப்பை உண்டாக்கும். அதுபோல கடலுக்குள் நிலம்
தாழ்ந்தும் போகும் இடங்களில், கடல்
நீர்மட்டம் அமிழ்ந்து போகும். அந்த இடங்களில் கடல்
நீரானது நிலப்பரப்பை விட்டு உள்வாங்கிப் போகும்.
சுனாமி தாக்கிய இடங்கள்
சுமத்ரா, இந்தோனேஷியா, இந்தியாவில் கன்னியாகுமரி, கோவளம், முட்டம், குளச்சல், நாகப்பட்டினம் போன்ற கடலோரப் பகுதிகளில்
கடலில் ராட்சத அலைகள் ஏற்பட்டு
பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
அதுபோல் திருச்செந்தூர் போன்ற இடங்களில், சுமார்
ஐந்து அடி அளவிற்கு கடல்நீர்
மட்டம் தாழ்ந்தும் போனது. அதனால் அதுவரை
கடல்நீர் சூழ்ந்திருந்த பகுதிகளில் நிலம் வெளியே தெரியத்
தொடங்கியது.
பாதிப்பு
உலெகங்கும் சுனாமி தாக்கியதால் ஏறக்குறைய
ஒரு லட்சம் மனிதர்கள் இறந்து
போனார்கள். அதுபோல் பல விளைநிலங்களில் கடல்நீர்
புகுந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்கள்,
விலங்கினங்கள் நாசம் ஆயின.
நடவடிக்கை
இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், மழை, இடி போன்றவற்றை
முன்கூட்டியே அறியும் சாதனங்களைப் போல்
சுனாமிப் பேரலைகள் அறியவும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவை கடற்கரைப் பகுதிகளில்
அமைக்கப்பட வேண்டும்.
கடற்கரையோரங்களில் வாழ்பவர்க்கு பேரலைகள் தாக்காத வண்ணம் குடியிருப்புக்களை
வழங்க வேண்டும் என்பன போன்ற நடவடிக்கைகளை
அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
முடிவுரை
இயற்கையின் சீற்றத்தைச் கட்டுபடுத்த முடியாது. எனினும் மக்கள் தங்களால்
இயன்ற அளவு பாதுகாப்பு ஏற்பாட்டை
செய்தாக வேண்டும். ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுதல். நிலத்தினுள் இருக்கும் சமநிலையைக் குலைத்தல் போன்ற மனிதனால் உருவாக்கப்படும்
சேதங்களையும் நிறுத்த வேண்டும். அவ்வாறு
செய்யின் இயற்கையின் சீற்றங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள
முடியும்.
Comments
Post a Comment