இந்திரா காந்தி



முன்னுரை

இந்திய நாட்டு விடுதலைக்குப் போராடிய குடும்பங்களுள் புகழ் வாய்ந்தது நேருவின் குடும்பம். ஜவஹர்லால் நேரு 'மனிதருள் மாணிக்கம்' 'ஆசிய ஜோதி' எனப் பாராட்டப் பெற்றவர். அவரது மகள் இந்திரா பிரியதர்ஷினி சமநிலைச் சமுதாயம் காண விரும்பிய வீராங்கனை. இவரே பிற்காலத்தில் 'இந்திரா காந்தி' என்று அழைக்கப்பட்டார்.



சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் சுமார் 17 ஆண்டுகள் பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் வித்திட்டார். இவருக்கும் பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவருடைய மறைவிற்குப் பின் குல்சாரிலால் நந்தா சில நாட்கள் தற்காலிகமாக பதவி வகித்தார். 19.01.1966-ல் இந்திராகாந்தி பிரதமர் ஆனார். அன்று முதல் 24.03.1977- வரை பதவியிலிருந்தார். பின்னர் 1977-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த இவர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றார். 14.01.1980 முதல் தொடர்ந்து தனது ஆயுட் காலம் முடியும் வரை பதவியில் இருந்தார்.

கட்சியின் பிளவு

ஆட்சியில் இருந்த போது இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் மோதல் ஏற்பட்டன. இதன் ஒரு அங்கமாக, 1969-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் நியமணத்தில் கருந்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது 14 பெரிய தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கினார். இதனை காங்கிரசில் இருந்த பழைமைவாதிகள் எதிர்த்தனர். இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவு ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவுக்கு இந்திரா காந்தி தலைமை ஏற்று. கட்சியை திறம்பட வழி நடத்தினார்.

1971-ல் மீண்டும் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில், மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானுக்கு இடையில் கருந்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த பிரச்சனையில், தனி நாடு கோரிகையை முன் வைத்து கிழக்கு பாகிஸ்தான். இந்திரா காந்தி அதற்கு ஆதரவு தெரிவித்தார். கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காள தேசமாக உருவானது.

நெருக்கடி நிலை

1975-ல் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த காலத்தில் தொடர் வண்டிகள் குறித்த நேரத்தில் புறப்பட்டன. குறித்த நேரத்தில் வந்து சேர்ந்த. அலுவலகங்களில் அலுவலர்கள் தங்கள் வேலைகளைச் செம்மையாகச் செய்தனர். விலைவாசிகள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. பொருட்களின் விலைப்பட்டியலையும் பொருட்களின் இருப்பையும் கடைக்காரர்கள் வெளிப்படையாக குறித்த விலையில் விற்றனர்.
இதனால் ஏழை எளியவரும், நடுத்தர வகுப்பினரும் பயன் அடைந்தனர். கள்ளக் கடத்தல்காரர்களும், கருப்புச் சந்தைக்காரர்களும், வன்முறையாளர்களும் கலக்கமுற்றனர். செய்தித்தாள்களில் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. மக்கள் நலன் மேம்படும் செய்திகள் மட்டுமே வெளிவந்தன. இந்திரா காந்தி பல சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். அறிவியல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினார். அதனால் பசுமைப்புரட்சியும், வெண்மைப்புரட்சியும் ஏற்பட்டன.

குணநலன்கள்

இந்திரா காந்தி அஞ்சா நெஞ்சம் உடையவர். தோல்வி கண்டு துவளாதவர். முற்போக்குச் சிந்தனையாளர், மதவெறி. சாதி வெறி அற்றவர். சோஷலிசத்தில் அசையாத பற்றாளர். ஓயாது உழைப்பவர். கருணை உள்ளம் கொண்டவர். மக்களை நேரில் கண்டு குறைகளை அறிவதில் ஆர்வம் உள்ளவர்.

பஞ்சாபில் நடந்த மதவெறி காரணமாக வன்முறைகள் தோன்றின. அதனை இந்திரா காந்தி ஒடுக்கினார். இதை விரும்பாத தீவிரவாதிகள் இந்திராவின் உயிருக்குக் குறி வைத்தனர். இதனை அறிந்து அஞ்சவில்லை. அவர் மக்கள் நலனில் நாட்டம் கொண்டு அயராது உழைத்தார். இறுதியில் மதவெறிக்குப் பலியானார். நாட்டு நலனுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணித்தார். 13.10.1984 அன்று அந்த தியாகச்சுடர் அணைந்தது.

Comments

Popular posts from this blog

காடுகள் பாதுகாப்பு

மாவீரன் பூலித்தேவன்

சுனாமி